சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மொழி , தமிழர் கலாச்சாரம், தமிழர்களின் பெருமைகளை பேசியபடி ஒலித்தது கமலஹாசன் குரல்.

தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் நடனங்கள் ,சேர சோழ , பாண்டியர்களின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் காட்சிபடுத்தப்பட்டன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச தரத்தில் அதாவது லேசர் வடிவில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இதன் பின்னணியில் தமிழர் பண்பாட்டு வரலாற்றை கமல் பேசும் ஆடியோ இடம்பெற்றிருந்தது. சங்காலம் முதல் நிகழ்காலம் வரை தமிழர்களின் வரலாறு குறித்து கமல் பேசியிருந்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
Comments are closed.