காரில் போகும் போது ரஜினிக்கு கைகாட்டிய கலைஞர்

Published On:

| By Kavi

kalaignar karunanidhi who waved to Rajini while driving

நடிகர் ரஜினிகாந்த், தான் கலைஞரை எப்போது முதன்முறையாகப் பார்த்தேன் என்ற சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று (அக்டோபர் 4) “கலைஞர் இதயத்தில் தனக்கென்று தனி இடம் இருந்தது” என்ற தலைப்பில் முரசொலியில் கட்டுரை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அதில் தான் எப்போது முதன் முதலில் கலைஞரை பார்த்தேன் என்று நினைவுகூர்ந்துள்ளார்.

“1977 ஆம் ஆண்டு என்­னு­டைய TMU 5004 பியட் காரை மியூ­சிக் அகா­டமி பக்­கம் ஓட்டிக் கொண்­டி­ருந்­தேன். பின்­னால் ஒரு வண்டி வந்­து­கொண்­டி­ருந்­தது.

ADVERTISEMENT

வண்­டி­யில் வந்­து­கொண்­டி­ருந்­த­வரை என் கார் கண்­ணாடி மூலம் உற்­றுப்­பார்த்­தேன். நன்கு தெரிந்த முகம். கண்­ணில் கருப்­புக்­கண்­ணாடி கலை­ஞர் என்று தெரிந்­தது.

நான் அப்­ப­டியே இடது பக்­க­மாக ஒதுங்கி வழி விட்­டேன். எனது காரை கடக்­கும் போது அவர் என்­னைப் பார்த்து அன்­பு­டன் சிரித்து கைகளை ஆட்­டி­னார்.

ADVERTISEMENT

காரில் என்­னைப் பார்த்து அன்­பு­டன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்­கை­யில் மறக்க முடி­யா­தது.  அது­தான் நான் கலை­ஞர் அவர்­களை முதல் முத­லில் பார்த்­தது” என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.ஜி.ஆர். சிவாஜியை நட்சத்திரமாக்கிய கலைஞர்

ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் ஏ.ஆர்.ரகுமான்

இந்திய வீரர்களை ஏமாற்ற முயற்சி…. போராடி தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா

அதிமுக ஆரம்பிக்க எம்.ஜி.ஆர். சொன்ன காரணம்- ரஜினி வெளியிட்ட ரகசிய ஆடியோ! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share