Vகிச்சன் கீர்த்தனா: பால் பொங்கல்!

public

‘விரதம் இருக்கும் காலகட்டத்தில் ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்க வேண்டும். அதாவது ஊனினைப் பெருக்கும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாத்விகமான உணவை அளவாக உண்ண வேண்டும். கூடிய மட்டும் வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்’ என்கின்றன விரத முறைகள். இந்த விரதத்துக்கேற்ற உணவுகளில் பால் பொங்கல் முக்கியமானது.

**என்ன தேவை?**

பால் – ஒரு லிட்டர்

பச்சரிசி – கால் கிலோ

முந்திரிப்பருப்பு, திராட்சை (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய் – தலா 10 (பொடிக்கவும்)

பச்சைக் கற்பூரம் – சிறிதளவு

சர்க்கரை – 500 கிராம்

நெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாலைப் பாதியாகச் சுண்டும் வரை நன்கு காய்ச்சி, அதில் ஊறவைத்த பச்சரிசி, சர்க்கரையைச் சேர்த்து பதமாக அடிப்பிடிக்காமல் கிளறவும். குழைந்து இறுகும் வேளையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடித்த ஏலக்காய், சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, ஒரு கரண்டி நெய்யும் சேர்த்து இறக்கவும்.

[நேற்றைய ரெசிப்பி: ராகி தோசை](https://www.minnambalam.com/k/2019/11/25/1)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *