கிச்சன் கீர்த்தனா: புரட்டாசி ஸ்பெஷல் - பாரம்பரிய சாம்பார்!

புரட்டாசி சனிக்கிழமை நாளையுடன் முடியப்போகுது. அப்புறம் விரதம் எதுவும் கிடையாது. எப்பப் பார்த்தாலும் புரட்டாசி மாசம், அசைவ உணவு சாப்பிட மாட்டோம்; சைவ உணவுதான் சாப்பிடுவோம் என்கிற வார்த்தையை இந்த மாசம் முழுவதும் கேட்டிருப்போம்.
அதனால, பெரும்பாலான வீடுகளில் தினமும் சாம்பார், புளிக்குழம்பு, பருப்புக் குழம்பு, காரக் குழம்பு இப்படியான ஒரேவிதமான சமையல்தான் இருந்திருக்கும். இதில், சற்று வித்தியாசமாக பாரம்பரிய சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு இன்றைய கிச்சன் கீர்த்தானாவில் அதற்கான செய்முறையை பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
சாம்பார் பொடி தயாரிக்க
துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
தனியா – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
விழுதுக்கு
தேங்காய்த் துருவல் – கால் கப்
சின்ன வெங்காயம் – 7
சீரகம் – கால் டீஸ்பூன்
சாம்பாருக்கு
துவரம்பருப்பு – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சையளவு
தக்காளி - 2
கத்திரிக்காய் – 2
முருங்கைக்காய் – 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் – கால் கப்
கடுகு – கால் டீஸ்பூன்
அலங்கரிக்க
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து லேசான தீயில் வறுத்து சாம்பார் பொடி தயார் செய்து கொள்ளவும்.
அதன்பின்னர், தேங்காய்த் துருவல், வெங்காயம், சீரகத்தைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதற்கிடையில், குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், புளியைக் கரைத்துக் கொள்ளவும்.