தென்மாநிலங்களில் அதிகளவில் தற்கொலைகள்: ஆணையர்!

இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(செப்டம்பர் 9) நடைபெற்றது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மீண்டு வந்தவர்கள் பலரும் பங்கேற்றனர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.