‘கயல்’ சந்திரன் மீது மோசடி புகார்!

கயல் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்திரன் மீது தயாரிப்பாளர் ஒருவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சந்திரமவுலி என்கிற சந்திரன் கயல் படத்தின் மூலம் கவனம் பெற்று ‘கயல்’ சந்திரன் என்று அழைக்கப்பட்டுவருகிறார். இவர் தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தை ரகுநாதன் என்பவருடன் சேர்ந்து தயாரித்து, நடித்துவருகிறார். இவர்களின் நிறுவனமான 2 மூவிஸ் ஃபப்ஸ் படத்தைத் தயாரித்துவருகிறது. இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரான அக்ரோஸ் மீடியாவின் பிரபு வெங்கடாச்சலத்துடன் சந்திரனும், ரகுநாதனும் ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் தயாரிப்புக்கு பிரபு வெங்கடாச்சலம் 5 கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.