Kநல்லெண்ணத் தூதராக மேரி கோம்

Published On:

| By Balaji

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ ) நடத்தும் பெண்களுக்கான இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியாவின் மேரி கோம் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கவுஹாத்தி நகரில், பெண்கள் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி வரும் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனையான மேரி கோம், இந்தப் போட்டிக்கு நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், **இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் இந்த மரியாதைக்குரிய தொடருக்கு மேரி கோமை நல்லெண்ணத் தூதராக தேர்வு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 34 வயதான மணிப்பூரைச் சேர்ந்த அந்தப் பெண்மணி தற்போது வியட்நாமில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று வருகிறார்.

பெண்கள் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுஹாத்தி நகரில் உள்ள நபின் சந்திராபாய் ஏசி இண்டோர் ஹாலில் நடைபெறவுள்ளது. இதே நகரில் கடந்த மாதம் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share