கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக மாமதுர என்ற பாடலும் சமீபத்தில் வெளியானது.
ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, கதையின் கரு மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
Extremely Elated to announce that #JigarthandaDoubleX will have a GRAND RELEASE in Tamil Nadu through @RedGiantMovies_.
Blasting worldwide in theatres, this Diwali 2023 💥@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers #AlankarPandian… pic.twitter.com/FKlEM1nWHi
— karthik subbaraj (@karthiksubbaraj) October 14, 2023
வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்த ஒரு அப்டேட் இன்று (அக்.14) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஜிகர்தண்டா படக் குழு அறிவித்துள்ளது.
கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார் : தமிழில் பேசிய பிரியங்கா