ஜெயம் ரவியின் அடுத்தப் படம்… இயக்குனர் இவர் தான்!

Published On:

| By Selvam

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி  திரையரங்குகளில் ரிலீசாகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக “ஸ்கிரீன் சீன் மீடியா” நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34 ஆவது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்’ திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ‘ஜெ ஆர் 34’ திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் நாயகியாக நடிப்பவர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக தற்போது தமிழ்நாடு காவல் துறை தலைவராக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால் மகள் தவ்திஜிவால் அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மெரினாவிற்கு வந்த நேதாஜி

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் : கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share