மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக-வுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 2 தொகுதிகளை மதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. மீதமுள்ள 27 தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது. வைகோ தலைமையிலான குழு, வேட்பாளர்களை நேர்காணல் செய்தது. மதிமுக-வின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக வேட்பாளர் நேர்காணல்
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
