�
டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடைபெற்றுவருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
டென்மார்க் ஓப்பன் பேட்மிண்டன் தொடர் அப்டோபர் 17 அன்று டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் தொடங்கியது. 22ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் முதல் தகுதிச் சுற்றில் 22-20, 21-18 என்ற நேர் செட்களில் கரோலினா மரினை வீழ்த்தி சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதைத் தொடர்ந்து நேற்று (அக்டோபர் 19) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்தின் ஷின்டா போலுடன் மோதினார். இதில் சாய்னா 22-20, 21-13 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்குத் தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் ஜப்பானின் யமாகுச்சுடன் மோதுகிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரணாய் 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சி சோங் வெய்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் முசாந்த் கடாம்பி 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் கொரிய வீரர் ஜன் ஹனக் ஜின்னை வீழ்த்தி, காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.�,