jஅகிலேஷ்தாஸ் குப்தா மரணம் : மோடி இரங்கல்!

Published On:

| By Balaji

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான பாபு பானரசி தாஸின் மகன் அகிலேஷ்தாஸ் குப்தா புதன்கிழமை (இன்று) காலமானார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சியில் அகிலேஷ்தாஸ் குப்தா மத்திய இரும்புத் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். லக்னோ நகர மேயராகவும் இருந்த அவர், காங்கிரஸ் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு பதவிகளை வகித்துவந்துள்ளார்.

இன்று காலை நெஞ்சுவலி காரணமாக அவர் மரணமடைந்தார். தாஸ் குப்தாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முன்னாள் எம்.பி., மற்றும் முன்னாள் மந்திரி அகிலேஷ்தாஸ் மறைவு என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது அர்ப்பணிப்புமிக்க பொது வாழ்க்கை நீண்டகாலம் நினைவுகூரப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பேட்மிண்டன் வீரராக இருந்த குப்தா தாஸ், இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share