கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா கே.எல்.ராகுல்?

Published On:

| By christopher

Is KL Rahul retiring from cricket?

2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பெறாத கே.எல்.ராகுல், 2024 ஜனவரியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியாவுக்காக எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.

இப்படியான சூழலில், 6 மாதங்களுக்கு பிறகு கே.எல்.ராகுலுக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த தொடரின் முதல் போட்டியில் 31 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல், 2வது ஆட்டத்தில் டக்-அவுட் ஆனதை தொடர்ந்து, 3வது ஆட்டத்தில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில், கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் வெளியானது.

இந்த நிலையில், கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன். இணைந்திருங்கள்…”, என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, கே.எல்.ராகுல் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கப்போவதாக தகவல்கள் பரவியது. இதற்கிடையில், அவர் ஓய்வை அறிவித்துவிட்டு, அந்த அறிவிப்பை டெலீட் செய்து விட்டதாக, கே.எல்.ராகுல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதுபோல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Is KL Rahul retiring from cricket?

ஆனால், இந்த புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, கே.எல்.ராகுல் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியில் இருந்து விலகி, மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ‘மெட்டாமேன்’ என்ற தனது புதிய நிறுவனத்தை கே.எல்.ராகுல் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிறுவனம் வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என அறியப்படுகிறது. இதற்காக கே.எல்.ராகுல் வெளியிட்ட பதிவில், தான் தன் கைகளில் ஒரு வாசனை திரவிய குப்பையை வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதன்மூலம், ‘கே.எல்.ராகுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்’, ‘கே.எல்.ராகுல் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைகிறார்’ போன்று பரவிய தகவல்கள் வெறும் வதந்தியே என்பது உறுதியாகியுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு கொத்தமல்லி கார அடை

செந்தில் பாலாஜி வழக்கு : தனியார் வங்கி மேலாளரிடம் குறுக்கு விசாரணை!

கொல்கத்தா மாணவி கொலை வழக்கு : “ஏன் இத்தனை குளறுபடிகள்?” நீதிபதி பர்திவாலா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share