Is Hair Colouring Safe?
இயற்கைக்கு மாறாக, தலைமுடியை செயற்கையான நிறத்துக்கு மாற்றுவது சரியா?
”முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜிலேயே கலரிங் செய்துகொள்கிறார்கள்.
பொதுவாக நமது முடி என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து மிகச்சிறிதளவு வேறுபடும் கலரில் மட்டுமே கலரிங் செய்துகொள்ளலாம்.
உதாரணத்துக்கு, கருமை நிறத்தில் முடி இருப்பவர்கள் மெல்லிய பிரவுன் நிறத்தில் கலரிங் செய்துகொள்ளலாம். அதை விடுத்து கிரே, ஆரஞ்சு என வித்தியாசமான கலரில், கலரிங் செய்துகொள்வது தலைமுடிக்கு ஆபத்து.
ஹேர் கலரிங் செய்வதால் அலர்ஜி, முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்சினைகள் வரலாம். ஹேர் கலரிங் செய்துகொள்வதால் முடிக்கு மட்டுமின்றி சில நேரங்களில் கண்களும் பாதிக்கப்படும்.
களையான முகமும் கறுத்துப்போகும். கண்களை பாதிக்கும் கிளக்கோமா மற்றும் வெண்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே, மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்துவிடும்.
ஃபேஷனுக்காகச் செய்யும் இந்த கலரிங் முறை, உடலுக்கு உகந்தது அல்ல. மேலும் நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொண்டவர்கள், மீண்டும் விரும்பினாலும், பழைய கருமை நிற முடியைப் பெற இயலாது. முடி முழுவதையும் எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இயற்கையாக முடி முளைத்தால் மட்டுமே பழைய நிறம் சாத்தியம். இல்லையெனில், ஏற்கனவே கலரிங் செய்யப்பட்ட முடியை மீண்டும் இயற்கையான முடியின் நிறத்துக்கு கலரிங் செய்துகொள்ள வேண்டும்.
பார்லர்களில் பயன்படுத்தும் க்ரீம்களில் ‘லெட் அசிட்டேட்’ கலந்திருக்கலாம். அவ்வாறு ‘லெட் அசிட்டேட்’ கலக்கப்பட்ட க்ரீம்களை தலைமுடியில் பூசினால், அது தோல் புற்றுநோயை வரவழைக்கக் கூடும். எனவே, தரமான க்ரீம்களைப் பயன்படுத்தும் பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்து கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
திருப்பு முனையா கேக்குறே திருப்பு முனை… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: மோடியை அழைத்த உதயநிதி… திமுக கூட்டணித் தலைவர்கள் அதிருப்தி!