இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தடுக்க நினைத்தால்.. அமெரிக்கா, பிரிட்டனுக்கு ஈரான் எச்சரிக்கை

Published On:

| By Minnambalam Desk

Iran Israel

இஸ்ரேல் மீதான தங்களது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குதல்களைத் தடுக்க நினைத்தால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. Iran Warns U.S. and U.K

அணுசக்தி விவகாரம் தொடர்பான இஸ்ரேலுடனான ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்த தாக்குதல் தொடர்பாக ஈரானின் அணுசக்தி முகாமை செய்தித் தொடர்பாளர் Behrouz Kamalvandi கூறுகையில், ஃபர்டோ அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் லேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது. கதிர்வீச்சு அபாயம் உள்ளிட்ட எந்த பேராபத்தும் இல்லை என்றார்.

இதனிடையே ஈரானின் பல நகரங்களில் இஸ்ரேல் உளவாளிகள் என சந்தேகிப்போர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பியவர்களையும் ஈரான் காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தடுக்க முயற்சித்தால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் (இங்கிலாந்து), பிரான்ஸ் ராணுவ தளங்களை தாக்குவோம் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share