ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு பதவி உயர்வும், 11 அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ips officers transfer and promoted
தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் நேற்று (பிப்ரவரி 24) பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் பின்வருமாறு..
மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக ஆயுஷ் மணி திவாரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில குற்ற ஆவணக் காப்பத்தின் ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வந்த எச்.எம்.ஜெயராம் ஐபிஎஸ், சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா ஐபிஎஸ், தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்புப்படை எஸ்.பியாக இருந்த அய்யாசாமி, சென்னை பட்டாலியன் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில சைபர் கிரைம் எஸ்.பி-யாக இருந்த அசோக்குமார், பொச்சம்பள்ளி பட்டாலியன் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பட்டாலியன் எஸ்.பியாக பணியாற்றி வந்த திருப்பூர் தெற்கு துணை ஆணையராக தீபா சத்யன் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர நிர்வாக பிரிவு துணை ஆணையராக சுப்புலட்சுமி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக அதிவீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு பெற்றவர்கள்! ips officers transfer and promoted
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஏ.எஸ்.பி ஷானாஸ் ஐபிஎஸ், சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமார் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஏற்கெனவே காலியாக உள்ள கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் ஏ.எஸ்.பி சிவராமன் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் சேலம் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் நகர ஏ.எஸ்.பி சிபினுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கெனவே காலியாக உள்ள திருச்சி வடக்கு மாநகர காவல் துணை ஆணையராக பணியாற்ற உள்ளார்.