தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. India vs South Africa 2nd Test
அதில் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்த நிலையில், 2வது போட்டி கேப் டவுன் மைதானத்தில் டிசம்பர் 3 அன்று துவங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெம்பா பவுமா, கீகன் பீட்டர்சன், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோருக்கு பதில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேஷவ் மகராஜ், லுங்கி நெகிடி என 3 மாற்றங்களுடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. மறுபுறத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷரதுல் தாகூர் ஆகியோருக்கு பதில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
டாஸ் வென்ற பிறகு, முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கினார், முகமது சிராஜ். இதன் காரணமாக, 4வது ஓவரில் முதல் விக்கெட், 6வது ஓவரில் 2வது விக்கெட், 9வது ஓவரில் 3வது விக்கெட், 10வது ஓவரில் 4வது விக்கெட் என, இன்னிங்ஸின் முதல் 10 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்தது.
முகமது சிராஜ் மாயாஜாலம் நிகழ்த்த, அந்த ஷோவில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் இணைந்ததனர். இதன் காரணமாக மளமளவென விக்கெட்களை இழந்த தென் ஆப்பிரிக்கா, 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முகமது சிராஜ் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, யஸஸ்வி ஜெய்ஸ்வால் ஏமாற்றம் அளிக்க, மறுமுனையில் ரோகித் சர்மா, அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 39 ரன்கள், 36 ரன்கள் மற்றும் 46 ரன்களை சேர்த்து, அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர்.
ஆனால், இவர்கள் விக்கெட் வீழ்ச்சிக்கு பிறகு, 153 ரன்கள் சேர்த்திருந்தபோது இந்திய அணி தனது 5வது விக்கெட்டை (கே.எல்.ராகுல்) இழந்த நிலையில், முதல் இன்னிங்ஸின் கடைசி 11 பந்துகளில் அடுத்தடுத்து 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது. மேலும், இந்திய அணியில் யஸஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் அய்யர் உட்பட 6 பேர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ரபாடா, நெகிடி, பர்கர் என மூவரும் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இருப்பினும், முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 98 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை சேர்த்துள்ளது. முதல் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்கா 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. துவக்க ஆட்டகாரர் எய்டன் மார்க்ரம் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சர்வர் பிரச்சினை: ஒரு மாதமாக பணப்பலன்கள் பெற முடியாத தொழிலாளர்கள்!
பியூட்டி டிப்ஸ்: முகத்தில் எண்ணெய் வடிகிறதா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
India vs South Africa 2nd Test