இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கியுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம், நடப்பு ஆண்டின் செப்டம்பரில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021இன் கீழ் இந்திய மாதாந்திர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆகிய தேதிகள் வரையில், 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
“இந்த கணக்குகளில் 8.72 லட்சம் கணக்குகளை, பயனாளர்களிடம் இருந்து எந்தவொரு புகாரும் வருவதற்கு முன்பே தடை செய்து விட்டோம். இந்திய வாட்ஸ்அப் கணக்கானது +91 என தொடங்க கூடிய தொலைபேசி எண் வழியே அடையாளம் காணப்படுகிறது.
கடந்த ஆகஸ்டில் 23.28 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் தடை விகிதம் 15 சதவிகிதம் அதிகம் ஆகும்.
ஏதேனும் தீங்கு நடந்த பின்னர், அதைக் கண்டறிவதற்கு பதில், தீங்கு நடைபெறுவதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்துவதற்கு முதல் இடம் கொடுப்பது சிறந்தது என நாங்கள் நம்புகிறோம்.
அதனால், தடுப்பு நடவடிக்கையில் குறிப்பிடும்படியாக எங்களது கவனம் உள்ளது” என்று வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
-ராஜ்
ஏவுகணை சோதனை: வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா!
குஜராத்: தேர்தலுக்கு முன்பே விமர்சனங்களை சந்திக்கும் பாஜக!