திருப்பதி: ரூ.300 டிக்கெட் வெளியீடு!

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று (நவம்பர் 11) காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

தினமும் 25,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்துக்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர்.

இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25,000 பேரும் மற்ற நாட்களில் 15,000 பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில்,

அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய மூன்று இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கீட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

-ராஜ்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

‘சாமானியன்’: இணையும் ஹிட் கூட்டணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *