ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

இந்தியா

ஜேஇஇ முதன்மைத் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள் (நவம்பர் 30) விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதற்கட்ட தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும்.

இதில் முதற்கட்ட தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி 2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த நவம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (நவம்பர் 30) முடிவடைகிறது.

விருப்பமுள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உட்பட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், மாணவர்கள் 011-40759000, 69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பருக்கள் வராமலிருக்க நிரந்தர தீர்வுகள் ஏதும் உண்டா?

விஜயகாந்த் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்: அமீர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0