ரயில்வே ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது!

இந்தியா

80,000 ரயில்வே ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுகிறது என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வேதுறை. இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13,169ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல சரக்குகளை கையாள 8,479சரக்கு ரயில்கள் உள்ளன.

இவற்றை நிர்வகிக்க ரயில்வே துறையில் 17மண்டலங்கள் மற்றும் 68டிவிஷன்கள் உள்ளன. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80,000ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

இவர்கள் 67,956கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பளஉயர்வு மற்றும் பதவிஉயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தனர். கொரோனா பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களின் கோரிக்கை குறித்த முடிவுகள் தள்ளி போனது.

தற்போது இந்தக் கோரிக்கை குறித்து ஒன்றிய அரசு முடிவெடுத்து உள்ளதாக ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர், “ரயில்வே துறையின் ஊழியர்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுத்துள்ளது.

அதன்படி இந்தத் துறையில் 7,8,9ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்படஉள்ளது.

அவர்கள் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

நிதியமைச்சகமும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் பணி இன்னும் மேம்படும்.

உலகிலேயே சிறப்பாக செயல்படும் இந்திய ரயில்வேதுறை இதன்மூலம் இன்னும் மேம்படும். அவர்கள் தான் இந்தத் துறையின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் இவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.2,500முதல் ரூ.4,000வரை கூடுதல் ஊதியஉயர்வு கிடைக்கும்.

-ராஜ்

6 பேர் விடுதலை: மத்திய அரசு மறுசீராய்வு மனு!

கிச்சன் கீர்த்தனா : பஞ்சாமிர்தம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *