உலகக்கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி!

Published On:

| By Minnambalam

முட்டை ஏற்றுமதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு  2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதியாகியுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன்படி மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு இரண்டு கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் கத்தாருக்கு அதிகளவிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்துப் போட்டி நடைபெறும் நிலையில் நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் மூன்று மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும், அதிகரித்து 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

-ராஜ்

திறப்பது இருக்கட்டும்..முதலில் கட்டுங்கள்: சு.வெங்கடேசன்

உதயநிதி அறை: அலங்கரிக்க இருக்கும் 3 புகைப்படங்கள்!