புதுவையில் தமிழ் மொழியில் மருத்துவக் கல்வி: தமிழிசை சவுந்தரராஜன்

இந்தியா

புதுவையில் தமிழ் மொழியில்  மருத்துவக் கல்வி கொண்டு வரப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது,

“புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்து குழு அமைக்கப்படும். மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

முழுமையாக தமிழ் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும்.

சுமார் ஆறு மாதங்களுக்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்களை தமிழில் தயாரிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும்.

ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தாய்மொழியான நம் தமிழ் மொழி மருத்துவக் கல்வியைக் கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் ஒரு மருத்துவர் என்ற முறையில் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை!

”ஆதாரம் இன்றி பேசக்கூடாது” ரஜினிக்கு அறிவுரை கூறிய அருணா ஜெகதீசன் அறிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *