இந்தியாவில் இருந்துவரும் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் 15 நாட்களுக்குள் கிடைக்கும் என இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.
18 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், இங்கிலாந்தில் 24 மாதங்கள் வசிக்கவும் வேலை செய்யவும் ஆண்டுதோறும் 3,000 விசாக்கள் வழங்குவதற்கான ’இங்கிலாந்து-இந்தியா இளம் தொழில் வல்லுநர்கள் திட்டம்’ கடந்த நவம்பர் 16ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து செயல்பட இருக்கிறது. இதையடுத்து, இந்திய மாணவர்களும், தொழில் வல்லுநர்களும் இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இதற்காக விசாக்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் இந்திய மாணவர்களுக்கான விசா 15 நாட்களில் வழங்கப்படும் என இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி பேசிய எல்லீஸ்,
“இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் மாணவர் விசாக்களுக்கான தேவை 89 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இதையடுத்து, விசா வழங்குவதற்கான செயலாக்க நேரம் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், விசா விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் முடிக்கவும் செயலாக்க ஆணையம் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் இன்று (டிசம்பர் 16) அளித்திருக்கும் பேட்டியில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கான சுற்றுலா விசாக்கள் 15 வேலை நாட்களுக்குள் தரப்படும் என்று கூறியிருந்தேன்.
அதன்படி, தற்போதைய மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், இதில் நம்முடைய நெட்வொர்க் குழு தொய்வின்றி பிரச்சினைகளை சாதித்துள்ளது.
இதையடுத்து, விசாக்காக விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் உட்பட அனைவரும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும்.
நாங்கள் அதிக அளவில் மாணவர் விசாக்களைப் பெற்றுள்ளோம். மேலும் மாணவர்கள் முடிந்தவரை விரைவாக விண்ணப்பிக்கவும். விசா செயலாக்கத்தில் உள்ள எளிமையான செயல்முறை, இந்திய குடிமக்கள் சுலபமாக பயணிக்க உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் நாளை இயங்கும்!