விமானப்படையில் சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா

இந்திய ராணுவத்தின் அக்னி பாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படையில் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் அக்னி பாத் திட்டம், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

அதேபோல தற்போது விமானப் படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய விமானப் படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2003 ஜூன் 27  – 2006 டிசம்பர் 27 தேதிக்கு இடையே பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு டிப்ளமோ படிப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

WI vs IND: சூர்ய குமார் யாதவ் அதிரடி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா

உயர் கல்வியில் பொது பாடத்திட்டம்: அகமும் புறமும்!- பகுதி -2 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *