நிலவிற்கு மிக அருகில் சென்றது சந்திரயான் 3

Published On:

| By Monisha

chandrayaan 3 get more closer to moon

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவிற்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதுமையை நிகழ்த்த வேண்டும் என்று மாபெரும் கனவோடு கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ.

தொடர்ந்து சந்திரயான் 3 சுற்று வட்டப்பாதையை இஸ்ரோ கண்காணித்து வந்ததோடு பூமியிலிருந்து சுற்றுப்பாதையை அதிகரித்து நிலவை நோக்கிப் பயணிக்க செய்தது, தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையையும் இஸ்ரோ குறைத்துக் கொண்டே வந்தது.

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற சவாலை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறது இஸ்ரோ.

அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டரை இஸ்ரோ வெற்றிகரமாக பிரித்து எடுத்தது. தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது.

இந்நிலையில் லேண்டரை நிலவிற்கு மேலும் அருகில் கொண்டு செல்வதற்கான பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அதன்படி ”டீ பூஸ்டிங்” முறையில் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவிலிருந்து 113 கி.மீ அருகிலும் 157 கி.மீ தொலைவிலும் உள்ள சுற்றுப்பாதையில் லேண்டர் நிலவை சுற்றி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான தென் துருவத்தின் புதிய புகைப்படங்களை லேண்டர் பகிர்ந்துள்ளது.

மோனிஷா

“துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தமுடியவில்லை” – பிடிஆர்

மீனவர்களுக்கு 10 புதிய அறிவிப்புகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel