6 பேர் விடுதலை: மத்திய அரசு மறுசீராய்வு மனு!

இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபட் பயஸ் ஆகிய 6 பேரும் 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்ததையடுத்து, அவர்களை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது.

பின்னர் இவர்கள் 6 பேரும் நவம்பர் 12 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.

விடுதலையான 6 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 6 பேர் விடுதலை செய்யப்படுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோனிஷா

மேற்குவங்க புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்!

ரசிகர்களுக்கு நடிகர் அஜித் புது அட்வைஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *