வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட் 18) அமலுக்கு வந்தது.
வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம் மூலம் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
மற்ற ஏ.டி.எம் மூலம் பெரு நகரங்களில் 3 முறையும், சிறு நகரங்களில் 5 முறையும் இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும் போது ரூ.20 சேவை கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏ .டி.எம் மூலம் எடுக்கும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ .21 இன்று முதல் வசூலிக்கப்படும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்