நேரடி ஒளிபரப்பு… ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ!

Published On:

| By christopher

Journalist falls into river

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து செய்தியை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் ஆற்றில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அசாமில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிக்கச் சென்றார்.

அதன் பின் அவர் ஆற்றங்கரையில் நின்று மக்களின் பிரச்சினைகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் அந்த ஊடகவியலாளர் ஆற்றில் நீந்தி மக்களின் உதவியோடு உயிர் தப்பினார்.

இது தொடர்பாக தெலுங்கு ஸ்க்ரைபின் எக்ஸ் கணக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டது, “அசாமின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தி வெளியிடும்போது ஆற்றில் விழுந்து பத்திரிகையாளர் உயிர் பிழைத்தார்” என்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காணாமல் போன குழந்தைகளின் உடல்கள் மீட்பு : பாட்னாவில் கலவரம்!

நிராகரிக்கப்பட்ட 1.48 லட்சம் மகளிருக்கு இந்த மாதம் முதல் ரூ.1,000 !

ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க உதவும் இரவு நேர உணவு முறை!

டாப் 10 செய்திகள்: அனைத்துக் கட்சி கூட்டம் முதல் கனமழை வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel