“தோனி போன்றவர்கள் இருப்பது ஐ.பி.எல் தொடருக்கு நல்லது” : டாம் மூடி

Published On:

| By Kumaresan M

2025ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில், சர்வதேச போட்டியில் 5 ஆண்டுகள் விளையாடாத வீரர்கள் ’அன் கேப்டு’ வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த இந்த விதியை கொண்டு வர, ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால், எதிர்ப்பை மீறி பிசிசிஐ மீண்டும் அந்த விதியை அமல்படுத்தியுள்ளது.

இதனால்,  தோனி அன்கேப்டு வீரராக அறிவிக்கப்பட்டு 4 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்படவுள்ளார். பிசிசிஐயின்  இந்த முடிவுக்கு  ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் மூடி , ”பிசிசிஐ அறிவித்த இந்த விதி மிகவும் சிறப்பானது. இதன் மூலம் நல்ல உடல் தகுதி இருந்தால் ஒரு வீரர் எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் விளையாடலாம். அந்த வீரர் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை பெரிய அளவில் சிறப்பாக செய்ய முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமே தோனிதான். இந்த விதியின் மூலம் குறைந்த விலையில் தோனியை சிஎஸ்கே அணியில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தோனி போன்ற மிகச் சிறந்த வீரர்கள் எவ்வளவு காலம் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்களோ அது தொடருக்கு பயன் தரும். இந்த விதி ஐந்து ஆண்டுகள் என்பதை மாற்றி மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை என்றால் அவரை ஐபிஎல் போட்டிகளில் uncapped வீரராக சேர்க்க வேண்டும். இந்திய அணியிலே பலவீரர்கள் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 கிராமி விருதுகளுக்காக போட்டிபோடும் மலையாள படங்கள்!

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: இரண்டு தொகுதிகளிலும் ஓமர் அப்துல்லா முன்னிலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share