பாடகி சைந்தவி பல பாடல்கள் பாடியிருந்தாலும் அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளு வய பூக்கலை யே என்ற பாடல் பாடிய பிறகு, தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அன்னியன் படத்தில் இடம்பெற்ற “அண்டங்காக்கா கொண்ட காரி” என்ற பாடல் மூலமாக தான் சைந்தவி சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு எண்ணற்ற மெலடி மற்றும் காதல் பாடல்களை பாடியுள்ளார்.
அதோடு பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை திருமணம் செய்து கொண்ட சைந்தவி சமீபத்தில் தான் ஜீவி பிரகாஷை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தான் பல பாடல்கள் பாடியிருந்தாலும் அதில் மறக்க முடியாத பாடல்கள் பற்றி சைந்தவி ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “நான் எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற, ’எள்ளு வய பூக்கலையே’ பாடலை மறக்க முடியாது. அந்த பாடல் வந்த பிறகு அதிகமான பாடல்கள் எனக்கு அதுபோலவே வந்தது. எல்லோரும் அந்தப் பாடலைப் போலவே பாட சொல்வார்கள். அந்தப் பாடல் தொண்டை கிழிய பாட வேண்டும்.
அதுவும் அடிவயிற்றில் இருந்தே மொத்த எக்ஸ்ப்ரஷனையும் காட்டி அழுதபடித்தான் பாட வேண்டும். சொல்லப் போனால் ஒப்பாரி மாதிரி தான் இருக்கும். இந்த மாதிரி கத்தி பாடுவதால் தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்கும். சில நேரங்களில் ரத்தமே வந்துவிடும். அந்த அளவிற்கு அந்த பாடல்களில் கஷ்டம் இருக்கும்” என்று சைந்தவி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வாழை படத்தில் ஒரே ஒரு குறை கண்டுபிடித்த ப்ளு சட்டை மாறன்… அது என்ன?