அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஓபிஎஸ் தரப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 20) அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பிற்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை பொறுத்தவரைக் கழக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து ஒரு மகத்தான உத்தரவை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
அதேபோல கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு எங்களது வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கியுள்ளது.
இது மகிழ்ச்சியான உத்தரவாக தான் எங்களுக்கு தெரிகிறது. அதுமட்டுமல்ல அதிமுகவின் சட்ட திட்ட விதிகளை பொறுத்தவரை சரியான சூழலில் நகரக்கூடிய ஒரு அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பிற்கு இது மிகப் பெரிய பின்னடைவு. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு செல்வதும் தேர்தல் ஆணையத்திற்கு செல்வதுமாக சூடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
சூடுபட்டும் அவர்கள் ஒரே கருத்தை தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்கள், அதனைப் பற்றி நாங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறினார்.
மோனிஷா
இரட்டை இலை : கர்நாடக தேர்தல் அதிகாரிக்குச் சென்ற முக்கிய கடிதம்!
ஓபிஎஸ் இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்