திருத்தந்தை பிரான்சிஸ், 2025 ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டருக்கு மறுநாள், திங்கட்கிழமை, வத்திக்கானின் காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள அவரது இல்லத்தில் தனது 88வது வயதில் காலமானார்.
இந்த அறிவிப்பை காலை 9:45 மணிக்கு அப்போஸ்தலிக் சபையின் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபாரெல் வெளியிட்டார். உலகம் முழுதுவதிலும் இருக்கும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல… அன்பை விரும்பும் அனைத்து மதத்தினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது இந்த செய்தி.

பாரம்பரியத்தின்படி, வத்திக்கான் இப்போது ஒன்பது நாள் துக்கக் காலத்தில் இருக்கிறது. இது பண்டைய ரோமானிய காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. இந்த காலகட்டத்தில், தகுதியான கார்டினல்கள் அடுத்த போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அடுத்த போப் யார்? அவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்?
அடுத்த போப் ஆண்டவராக உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த கார்டினல்கள் போட்டியாளர்களாக இருக்கலாம். தற்போதைய நிலவரப்படி கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேக்ல் (பிலிப்பைன்ஸ்), கார்டினல் பியட்ரோ பரோலின் (இத்தாலி), கார்டினல் பீட்டர் டர்க்சன் (கானா), கார்டினல் பீட்டர் எர்டோ (ஹங்கேரி), கார்டினல் ரேமண்ட் லியோ பர்க் (அமெரிக்கா), கார்டினல் மைக்கோலா பைசோக் (உக்ரைன்), கார்டினல் மேட்டியோ ஜூப்பி (இத்தாலி), கார்டினல் வில்லெம் ஜேக்கபஸ் ஐஜ்க் (நெதர்லாந்து), கார்டினல் மரியோ கிரெச் (மால்டா) உள்ளிட்டோர் சாத்தியமான வேட்பாளர்களாக இருக்கலாம். How will the next papal election be held? Four votes for India! Interesting tradition!
அடுத்த போப்பை, போப்பாண்டவரால் நியமிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் மிக மூத்த நபர்களான கார்டினல்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் அடுத்த சில நாட்களில் மாநாட்டிற்காக ரோம் செல்வார்கள்.
70 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220 க்கும் மேற்பட்ட கார்டினல்கள் உள்ளனர், ஆனால், சுமார் 135 கார்டினல்கள் மட்டுமே வாக்காளர்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் உரிமையில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். கார்டினல் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கடந்த 10 ஆண்டுகளில் பிரான்சிஸால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் 4 இந்தியர்கள்!
அவர்களில், நான்கு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சர்வமத உரையாடலுக்கான டிகாஸ்டரியின் தலைவர் மற்றும் செயின்ட் அன்டோனியோ டி படோவாவின் கார்டினல்-டீக்கன் கார்டினல் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் (51), கோவாவின் பெருநகர பேராயர், இந்திய கத்தோலிக்க பிஷப்கள் மாநாட்டின் தலைவர் டாமன்,
ஆசிய பிஷப்கள் மாநாட்டு கூட்டமைப்பின் தலைவர் – கார்டினல் பிலிப் நேரி ஃபெராவ் (72), ஹைதராபாத்தின் பெருநகர பேராயர் கார்டினல் அந்தோணி பூலா (63), திருவனந்தபுரத்தில் உள்ள சிரோ-மலங்கரா தேவாலயத்தின் மேஜர் பேராயர் கார்டினல் பேசலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் ஆகிய இந்த நான்குபேர்தான் அடுத்த போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க தகுதி பெற்ற இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?

இவர்கள் விரைவில் அடுத்த போப்பை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
போப்பின் மரணத்திற்கு 15-20 நாட்களுக்குப் பிறகு, சிஸ்டைன் சேப்பலில் மைக்கேலேஞ்சலோவின் அற்புதமான வர்ணம் பூசப்பட்ட கூரையின் கீழ் கார்டினல்கள் கூடி தங்கள் விவாதங்களைத் தொடங்குவார்கள்.
வாக்களிக்கும் கார்டினல்கள் மற்றும் ஒரு சில அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களைத் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். தேர்தல் செயல் முறையின் போது வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளே தொலைபேசி, அலைபேசி எதற்கும் அனுமதி இல்லை.

மாநாட்டு கூட்டம் ஒரு திருப்பலி கொண்டாட்டத்துடன் தொடங்கும். அதன்பின் விவாதங்களும் வாக்கெடுப்பும் தொடங்குகிறது. அடுத்த போப்பை தேர்ந்தெடுக்க, கார்டினல்கள் கல்லூரி ஒரே நாளில் நான்கு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். How will the next papal election be held? Four votes for India! Interesting tradition!
ஒரு போப்பைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு வாக்கெடுப்புக்குப் பிறகும், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் விழிப்புடன் இருக்கும் கூட்டத்திற்கு ஒரு சமிக்ஞையாக சிஸ்டைன் சேப்பலின் புகைபோக்கியில் இருந்து புகை வெளியிடப்படுகிறது.

கருப்பு புகை – ஒரு முடிவற்ற வாக்களிப்பைக் குறிக்கிறது. அதே நேரத்தில் வெள்ளை புகை வெளியிடப்பட்டால் ஒரு புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கும். போப் தேர்ந்தெடுக்கப்படாமல் மூன்று நாட்கள் கடந்துவிட்டால், அடுத்த சுற்று வாக்குகள் போடப்படுவதற்கு முன்பு கார்டினல்கள் சிந்திக்க நேரம் கொடுக்க ஒரு நாள் வாக்களிப்பை நிறுத்தி வைக்கலாம். சமீபத்திய வரலாற்றில் மிக நீண்ட போப் மாநாடு 1922-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது கார்டினல்கள் தங்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டனர்.
புதிய போப் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
