நம்மில் பலர் சண்டே ஷாப்பிங் சென்றால் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து ஃப்ரிட்ஜில் அடுக்கி விடுவார்கள். அப்படி செய்வது தவறு என்கிறார்கள் உணவு ஆலோசகர்கள். மேலும் அவற்றை இப்படித்தான் பத்திரப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை தருகிறார்கள்.
கிழங்கு வகைகளை வாங்கிய பின்னர் அவற்றை மண் இல்லாமல் கழுவி நிழலான, ஈரப்பதம் இல்லாத இடத்தில் சேமிக்க வேண்டும்.
இஞ்சியை அதன் கணுக்களை உடைத்து உப்புக்கரைசலில் சுத்தம் செய்து உலர்த்திச் சேமிக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு போன்றவற்றை காற்றோட்டமான இடத்திலோ, ஈரப்பதம் குறைவாக உள்ள இடத்திலோ வைக்க வேண்டும். வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வைக்கக் கூடாது.தனித்தனியேதான் சேமிக்க வேண்டும்.
கிழங்கு வகைகள், வெங்காயம், பூண்டு போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக் கூடாது.
காய்கறிகளைத் தனித்தனியே சேமிப்பதுதான் சரி. எந்தக் காய்கறியையும் துளையிடப்பட்ட கவர்களில் வைத்துதான் சேமிக்க வேண்டும்.
வெங்காயத்தை உரிக்கும்போது கருமையான படலம் காணப்பட்டால், அதில் பூஞ்சைத் தொற்று இருப்பதாக அர்த்தம். அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். அதே போல பூண்டு விளைச்சலில் அளவுக்கதிக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும். எனவே, அவற்றை சமையலுக்குப் பயன்படுத்தும்போது அப்படியே தோலுடன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். முளைவிட்டு, மஞ்சள் நிறத்தில் மாறிய பூண்டுப் பற்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே சரி.
விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக காய்கறி, பழங்களை தேவைக்கு அதிகமாக வாங்கி, அவற்றை அழுகவிட்டு, வீணாக்க மனமின்றி, பயன்படுத்தி, உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா… அதற்கு பதில் அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக தேவைக்கேற்ப காய்கறி, பழங்களை வாங்கி, சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியத்தை உறுதி செய்யலாமே’’ என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சாமை அதிரசம்!
கிச்சன் கீர்த்தனா : ராகி லட்டு
இனிமே ஒரு வாரத்துக்கு இதுதான் ஸ்நாக்ஸா?– அப்டேட் குமாரு
மகளிர் பாதுகாப்பு, வானிலை தகவல் பகிர்வு: தவெக மாநாட்டுக்கு குழுக்கள் அமைப்பு!