அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சட்னியை எவ்வாறு அரைப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாம் அத்தியாவசிய வாழ்கையில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. குறிப்பாக காய்கறிகள், கீரைகளை முக்கியமாக எடுத்துக்கொள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். தினமும் ஒரு கீரையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக முருங்கை என்பது மிக முக்கியமான கீரைகளில் ஒன்றாக உள்ளது.
முருங்கையின் நன்மைகள் (Benefits of Moringa leaves):
முருங்கைக் காய், கீரை, பூ என அதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இது தென்னிந்திய சமையலில் குறிப்பாக சாம்பார், குழம்பு போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இலைகள் கீரை, பொடி, சூப் போன்ற பல வடிவங்களில் நாம் சாப்பிடலாம். முருங்கை இலைகளில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் சோர்வு நீங்கவும், எலும்புகளுக்கு வலிமை அளிக்கவும் உதவுகிறது.
முருங்கை சட்னி எப்படி செய்வது (How to make drumstick chutney):
முருங்கை இலை சட்னி செய்ய, முதலில் ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும். 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்க்க வேண்டும். உடனடியாக 2 தேக்கரண்டி கொண்டைக் கடலை மற்றும் உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். இவை லேசான பொன்னிறமாக மாறும் வரை வதக்கலாம்.
பருப்பு வறுபட்டதும் 1/4 கப் வேர்க்கடலையைச் சேர்க்க வேண்டும். வேர்க்கடலை சட்னியில் அடர்த்தியையும் புரதத்தையும் சேர்க்கிறது. மேலும், 6-7 தோல் நீக்கிய பூண்டு பற்கள், 3 சிவப்பு மிளகாய் மற்றும் 1 பச்சை மிளகாய் சேர்க்கலாம். இந்த பொருட்கள் சட்னியின் காரத்தன்மை மற்றும் சுவையை சமப்படுத்துகின்றன. இவற்றை மிதமான தீயில் லேசாக பழுப்பு நிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
முருங்கை இலைகளை வறுத்து சட்னி வைக்க வேண்டும் (dry Moringa leaves):
பிறகு இவற்றுடன் 1 கப் புதிய முருங்கை இலைகளைச் சேர்க்க வேண்டும். முருங்கை இலைகளை நீண்ட நேரம் சமைக்கக்கூடாது, ஏனெனில் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும். ஆகவே, இலைகள் மென்மையாகி, மசாலாப் பொருட்களுடன் நன்கு கலக்கும் வரை வறுத்தால் போதும். வறுக்கும்போது இலைகளின் பச்சைத்தன்மை நீங்கி, சட்னிக்கு ஒரு தனித்துவமான நறுமணம் வந்துவிடும்.
இலைகள் நன்கு வறுபட்டதும் அரை எலுமிச்சை அளவு புளி கூழ் சேர்க்க வேண்டும். புளியின் புளிப்பு, முருங்கையின் லேசான துவர்ப்புத் தன்மையை சரியாக ஈடுசெய்கிறது. இறுதியாக, சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். உப்பு மற்றும் புளியின் கலவை சட்னியின் சுவையை அதிகரிக்கிறது. இவற்றை உடனே மிக்ஸியில் அரைக்காமல் சிறிது ஆறும் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில் சூடான கலவையை அரைப்பது சட்னியின் நிறத்தையும் சுவையையும் மாற்றும். ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீரைப் பயன்படுத்தி நன்றாகவோ அரைக்கலாம். இதனுடன் உங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்தால் முருங்கை சட்னி தயார்.
