கிச்சன் கீர்த்தனா: லேயர் மட்ரி!

Published On:

| By Gracy

வட இந்திய உணவு வகையான கரகரப்பான இந்த மட்ரியை நீங்களும் செய்து அசத்தலாம். வித்தியாசமான சுவை கொண்ட இந்த லேயர் மட்ரி, மாலை நேரத்துக்கான சூப்பர் ஸ்நாக்ஸாக அமையும்.

என்ன தேவை?

மைதா (மாவு பிசைய) – 2 கப்

ஓமம் – கால் டீஸ்பூன் (கையால் கசக்கவும்)

எண்ணெய் – கால் கப்

தண்ணீர் – தேவைக்கேற்ப

மைதா (பூசுவதற்கு) – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் (பூசுவதற்கு) – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் (பொரிக்க) – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

பூசுவதற்குக்கொடுத்துள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதா, 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து வைக்கவும். பிசையக்கொடுத்துள்ள மைதா, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்துக் கலந்தால் பிரெட் தூள் போல் வரும். இதில் தேவையான தண்ணீர் தெளித்து, ஓமம் சேர்த்து, பூரி மாவுப் பதத்துக்கு பிசைந்து ஒரு ஈரத் துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும். அதற்குப்பின் மாவை எடுத்து மீண்டும் 5 நிமிடங்கள் பிசையவும். இந்த மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து உருட்டவும். ஓர் உருண்டையை முதலில் எடுத்து பெரிய சப்பாத்தியாகத் திரட்டவும். பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள மைதா – எண்ணெய் கலவையில் இருந்து ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துப் பூசவும். இப்போது சப்பாத்தியை மீண்டும் இரண்டு பக்கமும் இழுத்து சதுரமாக மடிக்கவும். மீண்டும் தேய்த்து மைதா – எண்ணெய்க் கலவையைப் பூசவும். மீண்டும் மடித்து ரிப்பன் மாதிரி நீட்டாக தேய்த்துக் கத்திக்கொண்டு அரை இன்ச் கனத்துக்கு வெட்டி லேசாக அழுத்தவும். எண்ணெயைக் காயவைத்து, வெட்டியவற்றை மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து, எண்ணெயை வடித்து, ஆறவிட்டு பரிமாறவும். இதே போல இன்னோர் உருண்டையையும் தேய்த்து, வெட்டிப் பொரித்து எடுத்து ஆறவிட்டு பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share