மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 8வது சம்பள கமிஷன் குறித்த முக்கியமான அப்டேட் வந்துள்ளது.
8வது சம்பள கமிஷன் குறித்த தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவாகி வருகின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 8வது சம்பள கமிஷனுக்கான விதிகளை மத்திய அரசு நவம்பர் 2025 மாதம் அங்கீகரித்தது.
இந்த கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மறுபரிசீலனை செய்யும் பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
8வது சம்பள கமிஷன் மூலம் சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்ற கேள்வி ஊழியர்களிடையே எழுந்துள்ளது. அதற்கு அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என்றாலும், முந்தைய கமிஷன்களின் போக்கு மற்றும் ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் சில கணிப்புகள் உள்ளன.
7வது சம்பள கமிஷனில் சுமார் 23 முதல் 25 சதவீதம் வரை சம்பளம் உயர்ந்தது. 6வது சம்பள கமிஷனில் சராசரியாக சுமார் 40 சதவீதம் உயர்வு காணப்பட்டது. எனவே, 8வது சம்பள கமிஷன் குறித்த கணிப்புகளின்படி, சம்பளம் 20 முதல் 35 சதவீதம் வரை உயரக்கூடும்.
இந்த முடிவு ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்தே இருக்கும். அது 2.4 முதல் 3.0 வரை இருக்கலாம். உதாரணமாக, தற்போது 18,000 ரூபாய் சம்பளம் வாங்குபவரின் சம்பளம், 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு 30,000 முதல் 32,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது சம்பள கமிஷன் பொருந்தும் என்பதால் அவர்களது ஓய்வூதியமும் திருத்தப்படும் என்பது தெளிவாகியுள்ளது. அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இவை இரண்டும் தனித்தனியாக வழங்கப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இவற்றை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சில அறிக்கைகளின்படி, 8வது சம்பள கமிஷன் சம்பள மாற்றங்கள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் ஊழியர்கள் இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். முந்தைய கமிஷன்களின் போக்கைப் பார்த்தால் அமல்படுத்தும் தேதிக்கும், சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் முதல் தேதிக்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கும்.
7வது சம்பள கமிஷன் ஜனவரி 2016 இல் அமலுக்கு வந்தது. ஆனால், அமைச்சரவை ஒப்புதல் ஜூன் 2016 இல் தான் கிடைத்தது. அதன் பிறகுதான் நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. எனவே 8வது சம்பள கமிஷனும் தனது அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும். மேலும், துறைகள் தங்கள் சம்பளத்தை மறு கணக்கீடு செய்ய வேண்டும். இந்த முழு செயல்முறைக்கும் நேரம் எடுக்கும்.
எனவே, ஊழியர்கள் 2026-27 நிதியாண்டில் தான் உண்மையான தொகையை எதிர்பார்க்கலாம். மொத்தத்தில், 8வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு மற்றும் பிற சலுகைகள் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். இந்த கமிஷன் குறித்த அனைத்து தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
