ADVERTISEMENT

”வெப்பநிலை அதிகரிப்பு”: வானிலை ஆய்வு மையம்

Published On:

| By Manjula

அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் (பிப்ரவரி 15), நாளையும்(பிப்ரவரி 16) வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

ADVERTISEMENT

ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

ADVERTISEMENT

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

ADVERTISEMENT

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“இணைந்து குரல் கொடுப்போம்”: எடப்பாடிக்கு ஸ்டாலின் அழைப்பு!

மூடப்படும் திரையரங்கம்… நினைவுகளை பகிர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் வருத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share