காசாவில் தொடரும் போருக்கு மத்தியில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா வழங்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த 11 நாட்களாக போர் நீடித்து வரும் நிலையில், நேற்று (அக்டோபர் 17) இரவு காசாவின் மருத்துவமனையில் வான் தாக்குதல் நடத்தப்பட்டு அதில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 500 பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதனால் கடும் கண்டனத்தை இஸ்ரேல் எதிர்கொண்டிருக்கும் நிலையில்… ஜோர்டானில் அரபு தலைவர்களைச் சந்திக்க இருந்த ஜோ பைடன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஜோர்டான் பயணத்தை தவிர்த்துவிட்டு இன்று பிற்பகல் 1.25 மணியளவில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்குச் சென்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். டெல் அவிவ் நகரில் உள்ள பெஜ் குரியன் விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனக்காக காத்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நோக்கி கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் பெஞ்சமின் நெதன்யாகு பைடனை கட்டித் தழுவி வரவேற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல் அவிவ் கடற்கரை ஹோட்டலில் அவர்கள் முதல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பே பைடன் நெதன்யாகுவிடம் காசா நகர மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளில் இஸ்ரேல் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.
டெல் அவிவ் கடற்கரை ஹோட்டலில் அமெரிக்க அதிபரை அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார். பிறகு தனது போர் அமைச்சரவையை பைடனுக்கு அறிமுகப்படுத்தினார் நெத்தன்யாகு.
அதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோ பைடன்,
“இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா வழங்கும். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரேலிய குடிமக்களைக் கொன்றிருக்கிறார்கள்.
அமெரிக்கர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதத்தை விட ஹமாஸ் கொடியவர்கள். ஹமாஸை வைத்துப் பார்த்தால் ஐஎஸ் ஐஎஸ் கொஞ்சம் பகுத்தறிவு மிக்கதாக தோன்றுகிறது. அதனால் இஸ்ரேல் தனக்கு சரி என பட்டதை செய்யட்டும்” என்றார் ஜோ பைடன்.
பிறகு காசாவில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பேசிய பைடன், “
“நான் பார்த்தவற்றின் அடிப்படையில், அதை நடத்தியது நீங்கள் (இஸ்ரேல்) அல்ல என்று தோன்றுகிறது. ஆனால் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே நாங்கள் நிறைய விஷயங்களைக் கடக்க வேண்டும், ”என்று பைடன் இஸ்ரேலிய பிரதமரிடம் கூறினார்.
இதன் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஹமாஸ் தாக்குதலின் போது 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.
உங்கள் (அமெரிக்கா) ஆதரவு மற்றும் எங்களை தற்காத்துக் கொள்ள தேவையான கருவிகளை எங்களுக்கு வழங்குவதற்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்புக்காக நன்றி” என்று கூறினார்.
–வேந்தன்
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி பரிசு!
மருத்துவமனை பிளாட்பாரத்தில் மயக்க மருந்து இல்லாமல் ஆபரேஷன்: காசா கொடுமை!