திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published On:

| By Monisha

horizontal reservation for transgender

horizontal reservation for transgender

கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் அனைத்து சாதி, மதங்களிலும் உள்ள திருநங்கைகளுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கும் சமமான இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில்  இதனை வழங்க வேண்டும் என்று திருநங்கை ஆர்வலர் கிரேஸ் பானு கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று (ஜனவரி 9) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெயனா கோதாரி,

“திருநங்கைகள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்தாலும், மாநிலத்தில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு சற்று சிக்கலான கொள்கையாகவே இருக்கிறது” என்றார்.

மனுதாரர் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,

”தற்போது பெண்கள் என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் திருநங்கைகள், அனைத்து சாதி பிரிவுகளிலும் பெண்களுக்கு வழங்கப்படும் கிடைமட்ட இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியும்.

இருப்பினும், தங்களை ஆண்களாகவோ அல்லது மூன்றாம் பாலினத்தவராகவோ அறிவித்துக் கொள்பவர்கள்,

அந்தந்த சாதிப் பிரிவின் கீழ் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (எம்பிசி) பிரிவின் கீழ், எது அவர்களுக்கு பயனளிக்கிறதோ அதுவாக கருதப்படுகிறார்கள்.

இத்தகைய சிக்கலான கொள்கையால், பட்டியலிடப்பட்ட சாதி அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடி பிரிவை சேர்ந்த ஒரு திருநங்கை தன்னை ஆணாக அறிவித்துக் கொள்ளும் போது,

அவர் திருநங்கை என்று கருதப்படாமல், எஸ்.சி, எஸ்.டி ஆணாக மட்டுமே கருதப்படுகிறார்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அனைத்து சாதி,மத பிரிவிலும் திருநங்கைகளுக்கு 1% கிடைமட்ட இட ஒதுக்கீடு வழங்கும் கொள்கையை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது என்று வழக்கறிஞர் ஜெயனா கோதாரி கூறியதை பதிவு செய்த நீதிபதிகள் தமிழக அரசும் இதனை பரிசீலித்து இதற்கு எளிய தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ’தேசிய சட்ட சேவைகள் ஆணையம்’ தீர்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே, செங்குத்து இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பைப் பாதிக்காத வகையில் இதுபோன்ற கிடைமட்ட இட ஒதுக்கீடு கொள்கையை தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றும் திருநங்கைகளை ஆண், பெண் என்ற இரு பிரிவிற்குள் தள்ளாமல் தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

நான்கு வயது மகனை கொன்ற பெண் CEO… விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த வழக்கு ஒத்திவைப்பு!

horizontal reservation for transgender

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share