ADVERTISEMENT

கொட்டும் பெருமழை- கரூர், திருப்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை.. ‘லீவ்’ அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை?

Published On:

| By Mathi

Rain Schools Leave

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தற்போது அரபிக் கடல் மற்றும் வங்க கடல் இரண்டிலுமே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க உள்ளது.

ADVERTISEMENT

இதனால் தமிழகத்தில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட், மிக அதிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனையடுத்து மொத்தம் 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

திருச்சி
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
கள்ளக்குறிச்சி
ராணிப்பேட்டை
கடலூர்
நாகப்பட்டினம்
திருவாரூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
விழுப்புரம்

ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை
சேலம்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
நாமக்கல்
திருப்பூர்
கரூர்

ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி- காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share