தமிழகத்தில் நவம்பர் 6 வரை கனமழை!

Published On:

| By Kavi

தமிழகத்துக்கு நவம்பர் 6 வரை கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகக் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நிர்வாக ரீதியிலான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது மஞ்சள் அலர்ட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வரும் 6 ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக வாலாஜாபாத்,வண்டலூர்,வேளச்சேரி, பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர்,மாதவரம், அமைந்தகரை,

ADVERTISEMENT

அயனாவரம், திருவொற்றியூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று 11 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரியா

பொன்னியின் செல்வன் வெற்றி : மணிரத்னம் செய்த ஏற்பாடு!

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் திறப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share