16 மாவட்டங்களில் கனமழை : எங்கெங்கு தெரியுமா?

Published On:

| By Kavi

heavy rain in 16 districts

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. heavy rain in 16 districts

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது. 

இந்தநிலையில் 16  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இன்று (ஏப்ரல் 04) வெளியிட்ட அறிவிப்பில்,  “தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட  மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (ஏப்ரல் 5) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகும். 

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  ஏப்ரல் 10ஆம் தேதி வரை மிதமான மழைப்பு வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது. heavy rain in 16 districts

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share