சென்னையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி வட கடலோர மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15,16,17 ஆகிய 3 நாட்கள் சென்னை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 12 -20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது என்பதால் 4 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
மிககனமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 14) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலிக்கு குமரவேல் பாண்டியன், மாதவரத்துக்கு மேகநாத ரெட்டி, தண்டயார்பேட்டைக்கு கண்ணன், ராயபுரத்துக்கு ஜானி வர்கீஸ், திரு.வி.க.நகருக்கு கணேசன், அம்பத்தூர் பகுதிக்கு எஸ். ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டைக்கு பிரதாப், கோடம்பாக்கத்துக்கு விசாகன், ஆலந்தூருக்கு அமித், அடையாறுக்கு செந்தில்ராஜ், பெருங்குடிக்கு மகேஷ்வரி ரவிக்குமார், சோழிங்கநல்லூருக்கு உமா மகேஸ்வரி என 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மண்டலங்களை சேர்ந்த மக்கள் பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், தங்கள் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம். அவர்களின் தொலைபேசி எண்களும் இந்த அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றை கீழ்கண்ட அறிவிப்பில் காணலாம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? : அரசுக்கு ராமதாஸ் கேள்வி!