Sரிலாக்ஸ் டைம்: வரகரிசி பக்கோடா!

health

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியதும் அவசியமாகும். அதற்கு இந்த வரகரிசி பக்கோடா உதவும். ரிலாக்ஸ் டைமை ஹெல்த்தி டைமாக்கும்.

**எப்படிச் செய்வது?**

ஐந்து பச்சை மிளகாய், இரண்டு பெரிய வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கால் கிலோ வரகரிசி மாவு, கால் கிலோ கடலை மாவை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டு நன்கு கலந்துகொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவு மல்லித்தழை, ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவைப் பக்கோடா போல உதிரியாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

**சிறப்பு**

வரகரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *