கிச்சன் கீர்த்தனா: நவராத்திரி ஸ்பெஷல் – காராமணி இனிப்பு சுண்டல்!

health

:ஒன்பது நாள்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படக்கூடிய பண்டிகைதான் இந்த நவராத்திரி. அம்பாளை நினைத்து வழிபடும் பண்டிகை என்பதால், இந்த வழிபாடானது முழுக்க முழுக்க பெண்களுக்கே உரிய ஒரு பண்டிகை என்றுகூட சொல்லலாம். சிவனுக்கு ஒரு ராத்திரி அது ‘சிவராத்திரி’. அம்பாளுக்காகக் கொண்டாடப்படும் ராத்திரி, நவராத்திரி என்று சொல்லுவார்கள். இந்த நவராத்திரி சிறக்க இந்த காராமணி இனிப்பு சுண்டல் படைத்து, கொலு பார்க்க வருபவர்களுக்குக் கொடுத்து மகிழுங்கள்.

**என்ன தேவை?**

வெள்ளை காராமணி – ஒரு கப்

வெல்லம் – அரை கப்

நெய் – 2 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

வெள்ளை காராமணியை ஆறு மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, காராமணியை சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.

[நேற்றைய ரெசிப்பி: கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்](https://www.minnambalam.com/k/2020/10/19/1)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *