வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சினை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக பசியின்மை, செரியாமை உண்டாகும். இப்படிப்பட்ட நேரத்தில், குளிருக்கு இதமான உணவு இஞ்சி. அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த இஞ்சித் தொக்கு தீர்வு தரும்.
**என்ன தேவை?**
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
காய்ந்த மிளகாய் – 2
வெல்லம் – ஒரு சின்ன கட்டி
பெருங்காயம் – சிறிதளவு
புளி – ஒரு சிறிய உருண்டை
கடுகு – அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
இஞ்சியை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெல்லம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அரைத்து வைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
**சிறப்பு**
இதை நாள்பட வைத்துப் பயன்படுத்தலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
[நேற்றைய ஸ்பெஷல்: பயறு நல்லதா? கெட்டதா?](https://www.minnambalam.com/k/2019/12/15/8)�,