தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. gst fine for tamilnadu cable tv corporation
2017 – 2022 வரையிலான காலகட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரி 285.47 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாயாக செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், “மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம் தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு வழங்கும். உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அந்த சிக்னல்களை நுகர்வோர்களுக்கு வழங்குவார்கள்.
நுகர்வோரிடமிருந்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில் அரசு கேபிள் டிவி கழகம் சம வருமானத்தை பெறுகிறது. அதற்கான ஜிஎஸ்டி வரியையும் எந்த பாக்கியும் இல்லாமல் செலுத்துகிறது.
ஆனால் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் பொறுப்பேற்காது. 285 கோடி ரூபாய் வரியை அபராதத்துடன் சேர்த்து செலுத்தும்படி ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்”என்று கோரிப்பட்டிருந்தது.gst fine for tamilnadu cable tv corporation
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் இன்று (மே 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.
அவர், “கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது. ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 285 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாயாக செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். gst fine for tamilnadu cable tv corporation