குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. Group 2 exam TNPSC announcement
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது.
இந்தநிலையில் இன்று (ஜூலை 15) குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு மொத்தம் 645 பணயிடங்கள் காலியாக உள்ளது. இதில் குரூப் 2 பணியிடங்களுக்கு 50 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் காலியாக உள்ளது,
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. Group 2 exam TNPSC announcement
இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.08.2025
விண்ணப்பத் திருத்தச் சாளர காலம்: 18.08.2025 முதல் 20.08.2025 11.59 வரை
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் :28.09.2025 காலை 09.30 முதல் 12.30 வரை
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
