பொங்கல் பண்டிகை: பயணிகளுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்!

Published On:

| By Selvam

greater Chennai traffic advisory to passengers

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பலரும் தங்களது சொந்த ஊருக்கு படையடுத்து வருகின்றனர்

பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து நேற்று 3,000 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஒரேநாளில்  2.17 லட்சம் பேர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ததாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளிடம் போதுமான பேருந்து ஏற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில், “உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்,

கடைசி நேர அவசரம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவும்,

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியவும்,

அதிவேகமாக மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்,

இரவு நேர பயணத்தை தவிர்க்கவும்,

சாலை அடையாளங்களை பின்பற்றவும்,

மூடுபனியால் உங்கள் முன்னாள் உள்ள சாலை மற்றும் உங்களை சுற்றியுள்ள அடையாளங்களை பார்ப்பது கடினமாக இருக்கும்

பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சந்தானத்தின் நான் ஸ்டாப் லூட்டி: வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர் எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share